அரசு பள்ளியில் குழந்தைகளை சேருங்க! விழிப்புணர்வு பேரணி

1035பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சி உடையார்பாளையம் அரசு பள்ளி சார்பில், இன்று காலை 10 மணி அளவில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும்,
சிறு குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது எனவும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி,
உடையார்பாளையம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you