ஊதியூர் அருகே கார் மரத்தில் மோதி சட்ட கல்லூரி மாணவன் பலி

5128பார்த்தது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் 35. மனைவி நந்தினி 30. மகன் தேவ் பிரனீத் 2. கடந்த வாரம் புதன்கிழமை பழனிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். இவர்களுடன் உறவினர்கள் இந்துமதி வயது 26, திவித் வயது 6 மற்றும் சரவணன் பேஸ்புக் நண்பரும், திருப்பூர் தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரவீன் 21 உடன் சென்றுள்ளனர்.

புதன்கிழமை பழனிமலை பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் வீடு திரும்ப காரை சரவணன் ஓட்டி வந்ததாகவும், ஓட்டுநர் இருக்கை அருகே பிரவீன் அமர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊதியூர் அருகே நந்தமேடு அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே பொதுமக்கள் அனைவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடன் சென்ற சரவணன், நந்தினி, தேவ் பிரனீத், இந்துமதி, திவித் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி