தாராபுரம்: கார்கள் நேருக்கு நேர் மோதல் - மூவர் படுகாயம்

4223பார்த்தது
தாராபுரம்: கார்கள் நேருக்கு நேர் மோதல் - மூவர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலக்கடை என்ற இடத்தில் கார் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற காரும் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்