பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகன் அவர்கள் துறையூர் அருகே உள்ள தின்னனூர் கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் துறையூர் பகுதிகளுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை தான் வெற்றி பெற்றால் உடனடியாக செய்து முடிப்பேன் என்று வாக்குறுதிகளை கூறி திண்ணனூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.