வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

579பார்த்தது
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஇரண்டு சிறுமிகள் உட்பட 4பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70)மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10)என ஐந்து பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி