இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து இளைஞர் உயிரிழப்பு

54பார்த்தது
இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து இளைஞர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த எழுவனம்பட்டி ஜெகஜீவா நகரை சேர்ந்த பெத்தண்ணசாமி மகன் அஜித்குமார் (28). இவர், போர்வெல் இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தரகம்பட்டி அருகே போர்வெல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அஜித்குமார் பொருள்கள் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வையம்பட்டி நோக்கி அஜித்குமார் சென்றார். மண்பத்தை பகுதியில் சென்றபோது சாலை யோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார்.
வையம்பட்டி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி