வறண்ட கிணற்றில் தவறி விழுந்தவரை‌ மீட்கும் வீடியோ

7662பார்த்தது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வலையபட்டியை சேர்ந்த தங்கவேல் (45). விவசாயி. இவருக்கு சொந்தமாக உள்ள கிணற்றின் அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது மரம் வேரோடு சாய்ந்ததில் தண்ணீர் இல்லாத சுமார் 60 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்து, படுகாயம் அடைந்தார். பின்னர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்க துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சிறப்பு நிலை - அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் இறங்கி கயிறு மூலம் தங்கவேலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி