விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப். 29ம் தேதி தொடங்குகிறது

53பார்த்தது
விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப். 29ம் தேதி தொடங்குகிறது
தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 29ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுகளில் 2024-ம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 29ம் தேதி (திங்கட்கிழமை) துவங்குகிறது.

காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4. 30 மணி முதல் 6. 30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. ஆண்களுக்கான ஆக்கி பயிற்சி மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க ரூ. 236 பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

.

தொடர்புடைய செய்தி