அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்.

77பார்த்தது
அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 15 நாள்களுக்குப் பின்னா் 5ஆவது யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தி தொடங்கியது.


தூத்துக்குடியில் தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் இருந்து மொத்தம் 1, 050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


கடந்த 17, 18 ஆம்தேதி பெய்த கனமழை காரணமாக, மின் நிலைய வளாகத்தில் மழை நீா் சூழ்ந்தது. இதைத் தொடா்ந்து மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி, கடந்த 18ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.


பின்னா் வளாகத்தில் சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியும், மின் உற்பத்தியை தொடங்குவதற்காக 5 யூனிட்டுகளையும் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. தற்போது, 5ஆவது யூனிட்டில் மட்டும் சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது, மற்ற யூனிட்டுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி