தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி முத்து நகர் கடற்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் நெல்லை, குமரி, மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலான திமுகவினர் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
அப்போது கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த மாணவர்களுடன்
மேயர் ஜெகன் பெரியசாமி கிரிக்கெட் விளையாடி அந்த பகுதியில் வாக்கு சேகரித்தார்.