கனிமொழி வாகனத்தை சோதனை; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

2612பார்த்தது
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று (13/04/2024) தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் வ. உ. சி. திடலில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக்கு சென்றுகொண்டு இருந்தபோது ஆறுமுகநேரி பேரூராட்சியில் கனிமொழியின் பிரச்சார வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைக்குக் கனிமொழி கருணாநிதி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது பிரச்சார வாகனத்தில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்குப் பிறகு பிரச்சாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி