குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்.

85பார்த்தது
குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 1வது வார்டை சேர்ந்த கிருஷ்ணன் கோவில் தெரு, மேல சாத்தான்குளம், சண்முகம் நகரம், இட்டமொழி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளில் சுமார் ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக கிடைக்கவில்லை இதனால் இப்பகுதி மக்கள் குடிதண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் மேலும் விலை கொடுத்து வாகனங்களில் வரும் குடிநீரை வாங்கி செலவழித்துக் கொண்டிருக்கிறனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இது குறித்து எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதம் முன்பு குடிநீர் சப்ளை சரியில்லை சீராக வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை அவர்கள் கவனிக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் குடிதண்ணீர் இன்றி அவதிபடும் பொதுமக்கள் இன்று காலை பெண்களோடு காலி குடங்களுடன் சென்று சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கந்தவல்லி அப்பகுதி 1வது வார்டு கவுன்சிலர் சுந்தர் ஆகியோர் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி