பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை: கனிமொழி திட்டவட்டம்!

85பார்த்தது
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மறுபடி பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (10/04/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மறுபடி பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை என கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்
.