பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி!

70பார்த்தது
பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி!
கயத்தாறு அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்த ரேஷன் கடை ஊழியர் பலி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமம் சந்திதெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அருணாசலம் (50). இவர் கயத்தாறு மற்றும் தலையால் நடந்தான் குளம் கிராமத்திற்கு ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அய்யனார்ஊத்து கிராமத்தில் இருந்து கயத்தாறுக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காற்றாலை அருகே கயத்தாறு- தேவர்குளம் சாலையில் சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

இதனால் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அருணாசலத்தை 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான அருணாசலத்துக்கு முருகம்மாள் என்ற மனைவியும், சிவனேஷ் (19), நாராயணமூர்த்தி (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you