இம்முறை திருக்குறள் இல்லை.. என்ன பேசினார் மோடி?

70பார்த்தது
இம்முறை திருக்குறள் இல்லை.. என்ன பேசினார் மோடி?
சேலத்தில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாடிப்பெற்று வருகிறது. இதில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் மேடையில், பாரத அன்னை வாழ்க என தமிழில் தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன். இந்த முறை 400க்கு மேல், ஜூன் 4ல் 400க்கு மேல் என தமிழில் பிரதமர் மோடி பேசியுள்ளார். எப்போதும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி எதாவது ஒரு திருக்குறளை மையப்படுத்தி பேசுவார். ஆனால் இம்முறை வேறு தமிழ் வார்த்தைகளை பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி