வளர்ப்பு நாயை வீடு புகுந்து இரும்பு ராடால் குத்தி கொன்ற நபர்

4450பார்த்தது
போரூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார் இவர் தனது வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக செல்லப் பிராணியான நாய் இரண்டை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டின் எதிரில் கட்டிடம் வேலை செய்யக்கூடிய நபர் ஒருவர் மது போதையில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாதது தெரிந்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை கண்ட நாய்கள் அவரைப் பார்த்து குலைத்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மது போதையில் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் நாயை கழுத்தில் குத்தி துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

பின்னர் நாயின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது நாயை அந்த நபர் கொலை செய்தது தெரியவரவே அந்த நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாயை கொலை செய்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் அருகே கட்டிட வேலை செய்யக்கூடிய நபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையடிக்க சென்ற போது நாய் தடுத்ததால் கொலை செய்தாரா.! அல்லது மது போதையில் கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி