இரவு முதல் காலை வரை நடைபெற்ற தீயணைப்பு பணி

81பார்த்தது
நெல்லை மாநகர பேட்டை மரக்கடை ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து திடீரென ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீயணைப்பு பணியானது இரவு முதல் காலை வரை கிட்டத்தட்ட 9 மணி நேரம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :