வி கே புரம் அருகே சிறுத்தை தாக்கி ஆடு காயம்

593பார்த்தது
வி கே புரம் அருகே சிறுத்தை தாக்கி ஆடு காயம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வேம்பையாபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வீட்டில் நேற்று முன் தினம் இரவு கட்டியிருந்த ஆட்டினை சிறுத்தை ஒன்று அடித்து காயப்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஐயப்பன் வீட்டிற்கு சென்று இது குறித்து மேல்விசாரணை மேற்கொண்டனர்