தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான பிச்சம்பட்டி, கன்னியப்பிள்ளைப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பூக்களை ஆண்டிப்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நாளை (பிப்ரவரி 2) தை மாதம் முகூர்த்த நாள் என்பதால் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 3,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்