மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை எனக்கூறி அவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடியுள்ளார். இதனையடுத்து பெண் புரோக்கர் ஒருவர் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய பெண் கிடைத்துள்ளது. அண்மையில் அந்த பெண்ணை திருமணம் செய்த அவர் திருமணம் முடிந்து மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது தனக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசிக்கொண்டிருந்த அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த பெண் நகை பணம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளார். ஆனால் இதுகுறித்து அந்த நபர் புகார் ஏதுமளிக்கவில்லை என தெரிகிறது.