பள்ளியில் தீ விபத்து.. உயிர் தப்பிய 1400 மாணவிகள்

74பார்த்தது
பள்ளியில் தீ விபத்து.. உயிர் தப்பிய 1400 மாணவிகள்
பாகிஸ்தானின் ஹரிப்பூர் மாவட்டம் சிரிகோட் கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில் இன்று (மே 27) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளி முற்றிலும் சேதமடைந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்தில் பள்ளியில் இருந்த 1400 மாணவிகள் காப்பாற்றப்பட்டனர். இதனால், யாருக்கும் சிறிய காயம் கூட ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி