வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு

62பார்த்தது
வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு
நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம் (2) என்ற ஆண் குழந்தை உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு சேதமடைந்து இருந்ததே திடீர் விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி