3 வது விக்கெட்டை இழந்து திணறி வரும் இந்திய அணி

54பார்த்தது
3 வது விக்கெட்டை இழந்து திணறி வரும் இந்திய அணி
இந்திய அணி மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோது டி20 போட்டிகள் பார்படாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் ரன்கள் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ் 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 7.3 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி