48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்

1925பார்த்தது
48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்
இந்தியாவில் மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருந்த போதிலும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் முடிவே ஆட்சியமைக்க போவது பாஜகவா அல்லது காங்கிரஸா என முடிவு செய்யும். இதனிடையில் மும்பையின் வடமேற்கு தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) வேட்பாளர் ரவீந்திரா வாய்க்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா உத்தவ் தாக்ரே அணி வேட்பாளர் அமோல் கஜனன் நூலிழையில் தோற்றார்.

தொடர்புடைய செய்தி