திருக்காட்டுப்பள்ளி அருகே இளம்பெண் மாயம் - தாய் புகார்

1834பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே இளம்பெண் மாயம் - தாய் புகார்
திருக்காட்டுப்பள்ளி அருகே வீட்டில் இருந்த பெண்ணை காணவில்லை என்று அவர்கள் அம்மா போலீசில் புகார் செய்தார்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு கிறிஸ்துவ தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் மகள் சோபியா (19). இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த நான்கு மாதங்களாக திருச்செங்கோட்டில் உள்ள பஞ்சு மில்லில் வேலை செய்து வந்துள்ளார். தேர்தலுக்காக 14ஆம் தேதி வீட்டுக்கு வந்தவர் கடந்த 21ஆம் தேதி மதியம் எங்கு சென்றார் என்று தெரியவில்லையாம். அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் சோபியாவின் அம்மா ரெஜினா மேரி புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.