ஒரே நேரத்தில் 3 கோயில் போட்டி கும்பாபிஷேகம்

566பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50. இளங்கோ வயது 48. மாசிலாமணி வயது 46. இவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்து அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மகா மாரியம்மன் கோயில் கட்டும் பணியை துவங்கினர். இந்தக் கோயில் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே இவர்களுக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் விநாயகர் கோயில் மற்றும் மயிலை வேல்முருகன் கோயில் என தனித்தனியே ஆளுக்கு ஒரு கோயிலாக போட்டியாக கட்டத் தொடங்கினர். இதனை அடுத்து சகோதரர்கள் மூவருக்கும் இடையே கோயில் தொடர்பாக மோதல் முற்ற துவங்கியது. இதை அடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும்
மூவரும் சமாதானம் அடையவில்லை. 3 கோயில்களின் திருப்பணிகள் முடிவுற்று எந்த கோயில் கும்பாபிஷேகம் முதலில் நடத்துவது என முடிவெடுக்கும் தருவாயில் அதிலும் பிரச்சனை கிளம்பியது. இளங்கோவால் கட்டி முடிக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதன்படி ஏற்பாடு செய்து கொண்டிருந்த பொழுது இதை அறிந்த மற்ற இரண்டு சகோதரர்களும் அதே தேதியில் நடத்த வேண்டும் என்று மற்ற
கோயில்களுக்கும் என இன்று 3 கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.