வாக்குபதிவு இயந்திரம் வைக்கும் அறை- வட்டாட்சியர் ஆய்வு

537பார்த்தது
வாக்குபதிவு இயந்திரம் வைக்கும் அறை- வட்டாட்சியர் ஆய்வு
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல் நிலை  பள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாக்குபதிவு இயந்திரங்களை வைக்கும் பாதுகாப்பு அறையினை வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டார் அப்போது உடன் தேர்தல் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி