தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,
தேவராயன் பேட்டை அம்பலகாரதெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் எழுந்தருளியுள்ளது. ஒம் சக்திஅம்மன், பாலமுருகனுக்கு பால்குடம், கரகம், எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
கரகம் காவடி எடுப்பதை முன்னிட்டு சோலைபூஞ்சேரி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் பக்தர்கள் பால்குடம், கரகம், அக்னிசட்டி எடுத்து மேள தாளம், வாண வேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்பலகாரத்தெரு கிராம வாசிகள் செய்திருந்தனர்.