பாபநாசத்தில் நவீன மீன் இறைச்சிக்கூடம் அடிக்கல் நாட்டு விழா

1124பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி  வடக்கு வீதியில்  மூல தான மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் நவீன மீன் இறைச்சிக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து  பூமிபூஜை மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.  
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணைத்தலைவர் பூபதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், பிரேம்நாத்பைரன், முத்துமேரி 
மைக்கேல்ராஜ் , ஜாபர் அலி, பாலகிருஷ்ணன், கெஜலெட்சுமி குமார், தேன்மொழி உதயகுமார்,
ஒன்றிய பிரதிநிதி செந்தில்குமார்,
சுகாதார ஆய்வாளர் பரமசிவம்,   தனதேவ் இன்பிஃரா டெவலப்பர்ஸ்
ஒப்பந்ததாரர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி