சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் நான்கு பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை, தரமணி, அண்ணா நகர், சேத்துப்பட்டு உட்பட 10-க்கும் மேற்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.