6 பேர் கொலையில் தொடர்புடைய நபர் 15 ஆண்டுகளுக்கு பின் கைது

76பார்த்தது
6 பேர் கொலையில் தொடர்புடைய நபர் 15 ஆண்டுகளுக்கு பின் கைது
தென்காசி 6 பேர் கொலை யில் தொடர்புடைய
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டு களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா முக்கிய குற்றவாளி ஆவார்.

கடந்த 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த கபீர்@ மணிசாகுல் @ அபு குரைராவை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்ட தின் பேரில் கடையநல்லூர் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா நேற்று சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி