இல்லந்தோறும் வாக்கு சேகரித்த முன்னாள் மாவட்டதிமுக செயலாளர்

54பார்த்தது
இல்லந்தோறும் வாக்கு சேகரித்த முன்னாள் மாவட்டதிமுக செயலாளர்
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரியப்பபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாடாக்கண்ணுப்பட்டி, சீதாராமன் பட்டி, குமாரசாமி புரம், மேல லட்சுமி பட்டி, வெள்ளைபனையேறிப்பட்டி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் நேற்ற் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் வளன் ராஜா முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் வெங்கடேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சொட்டு சுப்பிரமணியன், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், நிர்வாகிகள் சிவன் பாண்டியன், ரூபன், மலபார் பாக்யராஜ், அருணா பாண்டியன், செந்தூர் முருகன், சந்திரசேகர், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி