தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 29 முதல் 33-ஆவது வார்டு பகுதியில் இன்று மக்களுடன் முதல்வர்- சிறப்பு முகாம் நகர்மன்ற தலைவர்
விஜயா சௌந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைகுமார் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.