டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. இன்று முதல் அமல்!

99105பார்த்தது
டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. இன்று முதல் அமல்!
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் (01.02.2024) அமலுக்கு வந்துள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10/- உயர்த்தப்பட்டுள்ளது.

375 மி.லி, 750 மி.லி, 1000 மி.லி கொள்ளவுகளிவ் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி