நேற்று தீர்ப்பு... இன்று அதிகாலையில் வழிபாடு

547பார்த்தது
நேற்று தீர்ப்பு... இன்று அதிகாலையில் வழிபாடு
ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபடும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை ஞானவாபி அருகே பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பூஜைகள் தொடங்கியது. அதிகாலையில் பூசாரிகள் பாதாள அறையில் உள்ள கோவிலை சுத்தம் செய்து சிவலிங்கத்தை வழிபட ஆரம்பித்தனர்.

தொடர்புடைய செய்தி