“காவிரி நீரில் தமிழக பங்கை பெற்றுத்தர வேண்டும்” - அண்ணாமலை

80பார்த்தது
“காவிரி நீரில் தமிழக பங்கை பெற்றுத்தர வேண்டும்” - அண்ணாமலை
காவிரி நீர் விவகாரம் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கை பெற்று தரும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டும். ஜூன் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்படாததால் பாசனத்திற்கு நீரின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீர் பெற வேண்டிய தமிழ்நாடு, அதில் பாதி அளவை கூட பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது” என்றார்.