T20 WC 2024: ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!

66பார்த்தது
T20 WC 2024: ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். “இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி எனது கடைசிப் போட்டி. இந்த வெற்றியுடன் விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. எனது டி20 வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்துள்ளேன். நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினேன். நான் வெற்றி பெற்றதால் விடைபெறுகிறேன்' என ரோஹித் சர்மா கூறினார்.

தொடர்புடைய செய்தி