கடும் நஷ்டத்தில் பங்குச் சந்தை

56பார்த்தது
கடும் நஷ்டத்தில் பங்குச் சந்தை
இஸ்ரேல் போர் காரணமாக இன்று காலை முதலே பங்குச்சந்தை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை சுமார் 300 புள்ளிகள் இன்று சரிந்து உள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 313 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 677 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 91 புள்ளிகள் சரிந்து 19,561 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இன்று சரிந்துள்ளது.