விருதுநகர்: ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (54). போலீஸாக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றிருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுடைய மோகன்ராஜ், காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., மோகன்ராஜை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.