கடும் வெப்ப அலை- மயங்கி விழுந்த மாணவிகள்!

84பார்த்தது
கடும் வெப்ப அலை- மயங்கி விழுந்த மாணவிகள்!
பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரின் ஷேக்புராவில் காலை நேரத்தில் பள்ளியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது 7 மாணவிகள் மயங்கி விழுந்தனர். துரிதமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்துள்ளனர். இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்கு பின் 7 மாணவிகள் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி