பாகல்பட்டி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி கலை நிகழ்ச்சி!

50பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பாகல்பட்டியில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024 ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இல்லத் தலைவி மதர் இக்னேஷியஸ், கல்லூரி செயலர் முனைவர் சகோதரி ஆண்டனி மரிய ஜான்சி, நிர்வாகி சகோதரி ரீத்தா மேரி கல்லூரி முதல்வர் முனைவர் அ. அமீர் துணை முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் மூன்றாமாண்டு மாணவிகள் அனைவரும் இணைந்து முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை நடனமாடியும் பாடல் பாடியும் வரவேற்றனர். கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றி விளக்கிக் கூறினர். இறுதியில் மூன்றாமாண்டு மாணவி அனைவருக்கும் நன்றி கூற வரவேற்பு விழா இனிதே நிறைவுற்றது.

தொடர்புடைய செய்தி