போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம்: இளம்பெண் மீது வழக்கு

2245பார்த்தது
போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம்: இளம்பெண் மீது வழக்கு
சேலம் திருவாகவுண்டனூரை சேர்ந்தவர் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண்ப பல குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன்
உயிரிழந்தார்.
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான
அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடைேய கடந்த 9-ந்தேதி இரவு காரில் சென்ற
போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை
சீலநாயக்கன்பட்டி பகுதியில்
இறக்கி விட்டு சென்றதாக
கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி அவரை
தேடிய போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான
விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார்.
அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட
அப்போது அங்கிருந்த போலீசார்
ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்தார்.
போலீஸ் வாகனத்தை
மறித்து போராட்டம் தற்போது மகன்களை பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார்
என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி