4 மாவட்டங்களில் 12ஆயிரம் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி

71பார்த்தது
4 மாவட்டங்களில் 12ஆயிரம் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக சேலம் மாநகருக்கு 3 கம்பெனியும், மாவட்டத்திற்கு 3 கம்பெனியும், தர்மபுரிக்கு 2 கம்பெனியும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தலா ஒரு கம்பெனியும் வந்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தவும், அவர்களுக்கு விரைவில் பணி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகளில்
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அந்தந்த மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளில் தேர்தல் பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற போலீசார், வனத்துறையினர், முன்னாள் ராணுவத்தினரும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி