சேலத்தில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

1928பார்த்தது
சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெரு பகுதியில் வசித்து வருபவர் செந்தமிழ் என்கிற முத்து. இவர் நேற்று முன்தினம் இரவு அவருக்கு சொந்தமான வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஓட்டு வீடு சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய செந்தமிழ் என்கிற மாதுவை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி