ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

4452பார்த்தது
ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததற்காக தற்போது ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.