வாளால் வெட்டிய இளைஞர்கள்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

5166பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது அப்சல். 24 வயதான இவர் எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருப்புத்தூர் செட்டியதெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இருந்த முன் விரோதம் காரணமாக இருவரும் சண்டையிட்டு கொண்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து சந்தோஷ் தனது நண்பர்களுடன் வாளுடன் சென்று வாணியன்கோயில் தெரு பகுதியில் சண்டையிட்டு கொண்டனர்.

இதில் முகமது அப்சலுக்கு நெற்றி மற்றும் கை விரல்களில் வெட்டுப்பட்டு திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து திருப்புத்தூர் நகர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி