ராஜீவ் வழக்கு மூவர் விவகாரம் - உயர்நீதிமன்றம் பதில்

73பார்த்தது
ராஜீவ் வழக்கு மூவர் விவகாரம் - உயர்நீதிமன்றம் பதில்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஆண்டு விடுதலையானவர்களை இலங்கை அனுப்பும் விவகாரம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த நீதிபதிகள் மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி