யூடியூப் சேனலில் பின்தொடர்பவர்களுக்கு வினாத்தாள் கசிவு

79பார்த்தது
யூடியூப் சேனலில் பின்தொடர்பவர்களுக்கு வினாத்தாள் கசிவு
ஒரு அரசு ஆசிரியர் தனது யூடியூப் சேனலில் தன்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்க 1-8 வகுப்புக்கான வினாத்தாள்களை கசியவிட்டுள்ளார். மனைவி பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் கேள்விகளை பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்த ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணைய இயக்குனர் புவனேஷ்வர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஆசிரியர், அவரது மனைவி மற்றும் மற்றொருவரை கைது செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.