ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா!

85பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா, மற்றும் சுகாதாரத் துறை சார்பாக பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து, நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு அருணா , திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே. செல்லபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி