புதுக்கோட்டை அருகே
சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்து
விபத்தில் டீக்கடைக்குள் இருந்த 5 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு, 19 பேர் காயமடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல்லரிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா புதுக்கோட்டை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வரும் வரை அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் விபத்தில் மரணம் அடைந்த ஐந்து நபர்களின் பிரத பரிசோதனையை விரைவில் நடத்தி அவர்களின் சொந்த ஊருக்கு அரசு அமரர் உறுதியில் அனுப்பி வைக்க மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா உத்தரவு பிறப்பித்தார்.